2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்பு சட்டத்தின் படி அரச அதிகாரிகளுக்கு சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (30) முடிவடைகிறது.
இது தொடர்பான அறிவிப்பை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (30) வரை சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச நிறுவன தலைவர்களுக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
