ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சச் சதித் திட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, முன்னாள் சமகி ஜன பலவேகய ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் அருண வருணஹந்திகே ஆகியோரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
