2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஊடாகத் தங்களது பெறுபேறுகளை நேரடியாகப் பார்வையிட முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
