நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, பொல்பிட்டிய மொரஹெனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வட்டவளை – ஞானானந்தகம வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்றைக் கடந்து செல்லும் போது மஹாவலி ஆற்றில் தவறி விழுந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டிய சோலங்கந்த ஜனஉதான கிராமத்தில் கடையொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நாவலப்பிட்டிய பஸ்பாகே கோரளை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.
கினிகத்தேனை அம்பகமுவ பகுதியில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
