தன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை, உயர்நீதிமன்றத்திற்கு முன்வைக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு இன்று (06) திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த மனு தொடர்பான பரிசீலனை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் தரப்பிலிருந்து இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
