அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு ஊடகமான IRIB வெளியிட்டுள்ள அறிக்கையில், IRGC கடற்படை மற்றும் வான்வெளிப் படைகள் இணைந்து மேற்கொண்ட முதல் கட்ட பதிலடி நடவடிக்கையில், இரு நாடுகளிலும் உள்ள 85 முக்கிய அமெரிக்க இராணுவ வசதிகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா கண்காணிப்பு விமானம் (ட்ரோன்) ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கூற்றுகள் தொடர்பாக அமெரிக்கா, பஹ்ரைன் அல்லது குவைத் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.
