நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக சிறை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த அதிகாரியின் நடவடிக்கையாலேயே பாரிய நெருக்கடி கட்டுப்படுத்தப்பட்டதாகவும், கைதிகள் தப்பிச் சென்றிருந்தால் அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அதிகாரியை வீரராகக் குறிப்பிட்ட அவர்கள், அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.
