Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

10,000 கிலோ கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் மன்னாரில் கைது!

#மன்னார் #கடல்அட்டைகள் #மீனவர்கள் #கைது #இலங்கை #கடல்சார்_குற்றம் #செய்திகள் #BreakingNews #Mannar #SeaCucumber #Fishermen #SriLanka #NewsUpdate #IllegalFishing_

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் இன்று (09) மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோத கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 படகுகளும், அவற்றில் இருந்து சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கடல் அட்டைகள் சௌத்பார் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீட்கப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. இது குறித்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இன்று (09) மாலை கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட்டன.

அதேவேளை, கைது செய்யப்பட்ட 26 மீனவர்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநிலங்களவை உறுப்பினர் யார்?

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அனுரவிற்கு 75.5 சதவீத மக்கள் ஆதரவு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் – பிரதமர் ஹரிணி

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube