கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயிலில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்யப்பட்டமை நுகர்வோர் விவகார அதிகார சபையினரின் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 120 ரூபாய் விலையிடப்பட்ட குடிநீர் போத்தல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
