பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேல் மாகாணத்தில் இதுவரை 5,242 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 239 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் இரட்டிப்பு அளவில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
