களுத்துறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (13) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, மின்கசிவு காரணமாக இந்தத் தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சேத விபரங்கள் மற்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
