கட்டார் நாட்டின் நவீன அரசை உருவாக்கியவரும், முன்னாள் அமீருமான ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்ட செய்தியில், ஷேக் ஹமாத்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவமும், கட்டார் நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவையும் என்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, அரச குடும்பத்தினர் மற்றும் கட்டார் மக்களுக்கு தனது இதயபூர்வமான இரங்கலை ஜனாதிபதி தெரிவித்துக்கொண்டார்.
