விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் காளான் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
250 பயிர்ச்செய்கைப் பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு இல்லமொன்றை 3 மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் 2,025 ரூபாவாகும்.
நோய்த்தாக்கங்கள் அல்லது பூச்சிப் பீடைகளினால் பயிர்ச்செய்கைக்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், 22,500 ரூபா காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் அனைவரும் இக்காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்பாராத பயிர் நஷ்டங்களிலிருந்து பாதுகாப்பளிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
