Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபா தொடர்பில் நாமல் கடும் விமர்சனம்!

BOC Bank | 51 Millon | Pthujana Peramuna | Namal Rajapaksha | Srilanka | Quick Tamil News

சித்திரை 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

“வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடுகளை அரசு குறைத்து மதிப்பிட முயல்கின்றது. ஆனால், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபா இன்னும் கணக்கில் காட்டப்படாமல் மாயமாகவே உள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இரட்டை கொடுப்பனவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் “அடிப்படையற்றவை” என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் இந்தப் பதிவை இட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக ஒப்பந்தகாரர்களுக்கு 263 மில்லியன் ரூபாய் தவறுதலாக அனுப்பப்பட்டதை, இலங்கை வங்கியின் நிதித் திரும்பப் பெறும் அறிவித்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை மீளப் பெறப்படவோ அல்லது கணக்கில் காட்டப்படவோ இல்லை.

உத்தியோகபூர்வ ஆவணங்களே உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, எந்த அடிப்படையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை மறுக்கின்றார்.?” என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த விவகாரத்தில் அமைதி காப்பதையும், அரசின் மறுப்பு அறிக்கைகளையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த காலங்களில் சர்ச்சை ஏற்படுத்திய “திறைசேரி மின்னஞ்சல் மோசடி” போன்ற விவகாரங்களுடன் இதனைத் தொடர்புபடுத்திய நாமல் ராஜபக்ஷ, அரசு உண்மைகளை மறைக்க முற்படாமல், நடந்த தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொலைபேசி இணைப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது!

வைகாசி 17, 2026
இலங்கை

கொழும்பில் எதிர்க்கட்சிகள் சத்தியாகிரகம்!

ஆனி 8, 2026
இலங்கை

மாத்தளையில் மகனால் தந்தை கொலை!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube