Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் ‘அரவணை’ பல்லியேட்டிவ் சிகிச்சை நிலையம் திறப்பு!

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இறுதிக்கட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான “அரவணை” பல்லியேட்டிவ் (Palliative Care) சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு மனிதநேய சேவைகளை முன்னெடுத்து வரும் பாலம் – The Bridge to Humanity Australia அமைப்பின் நிதி அனுசரணையில் சுமார் 3 கோடி ரூபா செலவில் இந்த நவீன சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தின் திறப்பு விழா நேற்று (14.07.2026) இடம்பெற்றதுடன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

இறுதிக்கட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வலி குறைந்த, அமைதியான மற்றும் கண்ணியமான சூழலில் தங்களது இறுதிக்காலத்தை கழிக்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைகளுக்கு மேலதிகமாக, நோயாளிகளுக்கான உளவியல் ஆலோசனைகள், உணர்வுபூர்வ ஆதரவு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான வழிகாட்டல்கள் உள்ளிட்ட முழுமையான பல்லியேட்டிவ் பராமரிப்பு சேவைகளும் இங்கு வழங்கப்படவுள்ளன.

வட மாகாண சுகாதார சேவையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படும் இந்த நிலையம், நோயாளிகளின் உடல் வலியை குறைப்பதுடன், அவர்களின் வாழ்வின் இறுதிக்காலத்தை மனிதநேயமும் கண்ணியமும் நிறைந்ததாக மாற்றும் நோக்கத்துடன் செயற்படவுள்ளது.

வடக்கு மக்களின் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் இந்த மனிதாபிமானத் திட்டம், சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாவின் மனு இன்று விசாரணைக்கு!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்:இறுதி எச்சரிக்கை

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நாட்டிலேயே சிறந்தவர்கள் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube