பொல்பிட்டிய போட்லண்ட் நீர்த்தேக்க அணையின், பாலம் மீதிருந்து கெசல்கமு ஓயாவிற்குள் குதித்து காணாமல் போயிருந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரின் சடலத்தை ஆற்றில் இருந்து மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பல்லேவத்தை, பொல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த நபர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் வீட்டில் இருந்து நீர்த்தேக்க அணை வழியாக ஓடிவந்து ஆற்றுக்குள் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
