கணேமுல்ல சஞ்சீவ கொலைச் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக, வெலிசறை அதி பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத்திடம் வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளுக்காக இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
