இன்று (07) இலங்கைக்கு வருகை தரும் வியட்நாம் ஜனாதிபதி தோ லாம் (To Lam), நாளை (08) பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதன் காரணமாக, நாளை பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன இன்று (07) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
