மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்துக்குள் நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (15) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தாமதமும் இல்லை. தேர்தல் இந்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்பது உறுதியானபோதிலும், அது எந்த மாதத்தில் அல்லது எந்த காலப்பகுதியில் நடைபெறும் என்பதை இப்போதைக்கு கூறமுடியாது என்றார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். யார் சொல்கிறார்கள் அதனை தாமதப்படுத்துவதாக? எமக்கு அதற்கான தேவை உள்ளது. இந்த வருடத்திற்குள் தேர்தல் நடத்தப்படும். அதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது அமைச்சு இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
