பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்சா’காப்புறுதித் திட்டம் 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.
அதை தொடர்ந்து ,2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இந்த காப்புறுதித் திட்டமானது முன்னெடுத்துச் செல்லப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
