இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள சீன இராணுவத்தின் சீனியர் கேர்னல் ஃபூ ஷியாவ், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்ட சீன பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், இலங்கை–சீனா இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களைப் பொருத்த பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இராணுவப் பயிற்சி திட்டங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் துணை பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரியும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
