புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஒழுங்கமைப்பில் பகிரங்க அரசியல் கருத்தரங்கு ஒன்று நேற்று (7) வவுனியாவில் இடம்பெற்றது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் நி. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் மக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி. கா. செந்தில்வேல், கட்சியின் மலையக பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் மற்றும் முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி நுவன் போபகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.

