அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான அபாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று ஹோர்முஸ் நீரிணை அருகே விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அதில் பயணித்த இரு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பான விரிவான அறிக்கை செவ்வாய்க்கிழமை பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், ஹெலிகொப்டர் ஈரானின் தாக்குதலால் வீழ்ந்ததா, இயந்திரக் கோளாறால் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது இதுவரை தெளிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களமும் மத்திய கட்டளைத் தலைமையகமும் உடனடியாக பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
