வெளிநாட்டில் இருந்து வருபவர்களையும் புலம்பெயர் தேசத்திலிருந்து வரும் நபர்களையும் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த கும்பல் ஒன்று சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.
கணவன், மனைவி மற்றும் மச்சான் அடங்கிய மூவர் குழுவே இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்களை ஆசை வார்த்தை கூறி பெண் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்வதும், பின்னர் கணவன் மற்றும் அவரது மச்சான் அங்கு சென்று காணொளி பதிவு செய்து மிரட்டி பணம், நகைகளை பறிப்பதும் வழக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதே முறையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு முன்னரும் முறைப்பாடுகள் உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
