ஹுங்கம பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை , ரன்ன – வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு திரும்பும் சந்தியருகே நேற்று (20) பிற்பகல் ரன்ன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் ரன்ன, கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
