யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் 45ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று 8 மனித எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 494 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழிகளில் ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
