விசேட அதிரடிப்படையின் புத்தள முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, 282 கிலோகிராம் 240 கிராம் உலர்ந்த கஞ்சாவைத் தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்வாடிய, ஜூலம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.
கொஸ்ලந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் உணகந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
