நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து 433 குடும்பங்களைச் சேர்ந்த 1725 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
