தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதே போல திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுண்) தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் “அண்ணன் சீர் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் திருமணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தகுதி பெறும் பயனாளிகளுக்கு 1 பவுண் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது தெரிவித்துள்ளார்.
