நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், சபரகமுவ மாகாணம் மற்றும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தெற்கு மாகாணம் மற்றும் களுத்துறை, கொழும்பு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் வாய்ப்பும் உள்ளது.
