நேற்று (15) கண்டி கன்னொருவ பகுதியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியின் போது, வானில் பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதன் விளைவாக, சம்பவ இடத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கன்னொருவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
