கொழும்பு–அவிசாவளை பிரதான வீதியின் அங்கொட பகுதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் பேருந்து சாரதியின் நிலைமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
