ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை (9) மேற்கொள்ளப்படவுள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த அறிக்கைகளை கருத்தில் கொண்டு, கோட்டை நீதவான் பசன் அமரசேன, உடற்கூற்று பரிசோதனை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரினால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவால் இந்த உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
