முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
‘விநியோகஸ்தர் ஒருவரிடம் இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த போது குறித்த தகவல் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கைது செய்துள்ளனர்.
