மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய நிகழ்ச்சித் திட்ட விழிப்புணர்வுப் பேரணி இன்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.
தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியவை ஒன்றிணைந்து குறித்த திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, போதைப்பொருளை தடுக்கும் விதமாக அமைந்திருந்தது.
மங்களராமய விகாரையில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த விழிப்புணர்வு நடைபவனி சென்றது. இதில் கலந்துகொண்டவர்கள், “போதை பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம்” எனும் கருப்பொருள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
