பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபில்லவெல பகுதியில் நேற்று (16) சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
