மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் லீற்றரொன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான தொகையை உயர்த்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 10 நாட்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதன்படி, தலைநகர் புதுடெல்லியில் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 87 சதத்தினால் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 51 சதமாகவும், டீசல் லீற்றரொன்றின் விலை 91 சதங்கள் உயர்த்தப்பட்டு 92 ரூபாய் 49 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
