Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவவேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது.

தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.

மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கை சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈத் முபாரக்!

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யக்கூடும்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதி சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது!

வைகாசி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ குடியரசில் வேகமாக பரவிவரும் எபோலா வைரஸ்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனை ரயில்பாதை பணிகள் மிக விரைவில் நிறைவடையும் – பிரியந்த தீகல!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube