எல்பிட்டிய – குடுவேகொட பகுதியில் இன்று நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனது 2 ½ வயதான பெண் குழந்தையை தாய் ஒருவர் கிணற்றில் வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பியுள்ளது.
கிணற்றில் மிதந்த குழந்தையை குழந்தையின் தந்தை மற்றும் அயலவர்கள் உடனடியாக இணைந்து மீட்டுள்ளனர்.
காவல்துறையினர் தெரிவிக்கையில், “கிணறு அதிக ஆழமாக இல்லாததாலும், உடனடியாக மீட்கப்பட்டதாலும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை” என கூறியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய தாயை எல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
