பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பமுணுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என்றும், அவரது உயரம் சுமார் 5 அடி 3 அங்குலம் என்றும் ஆரம்பகட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுணுகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
