மத்திய மலைநாட்டில் தொடர்ந்து லேசான மழை மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடும் மூடுபனி காரணமாக, பிரதான வீதிகளில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதனால் மலையக பாதைகளில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.
தொடர் மழை, மூடுபனி, அல்லது எண்ணெய்/தண்ணீர் கசிவு காரணமாக பிரதான வீதிகள் அதிகமாக வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படக்கூடும்.
அத்துடன் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி போன்றவை அதிகம் வழுக்கும் வீதிகள் உள்ளதென பல இடங்களில் எச்சரிக்கும் வீதி சமிக்ஞைகள் வைக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை அவதானித்து வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் கடும் மூடுபனி மற்றும் லேசான மழை பெய்யும் போது முகப்பு விளக்குகளை (Fog lights/Headlights) எரியவிட்டு பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இத்தகைய சூழல் அதிகம் என்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
