மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மன்னம்பிட்டிய மகாவெவ கவன்குவ பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள், மற்றும் பொலிஸார் சேர்ந்து பொலனறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
09 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், இருவர் மன்னம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
