புசலாவை பெருந்தோட்டக் கம்பெனிக்குச் சொந்தமான ரொச்சேத் தோட்டத்தில், ஐந்து தொழிலாளர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கிடையில் நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் பலனாக, இடைநிறுத்தப்பட்ட ஐந்து தொழிலாளர்களும் நாளை முதல் மீண்டும் பணியில் இணைக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான விடயங்களில் இனிவரும் காலங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிக்காக ஒற்றுமையுடன் போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், ஆதரவு வழங்கிய தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
