அமெரிக்கா மற்றும் ஈரானிடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் பலனாக, பாகிஸ்தான் அரசு உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதன்படி பெட்ரோல் விலை லீற்றருக்கு 74 ரூபாயும், டீசல் விலை லீற்றருக்கு 67 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி விலைக்குறைப்பால், பெட்ரோல் விலை 373 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், டீசல் விலை 378 ரூபாயிலிருந்து 311 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வந்த மோதலால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்வடைந்தது.
தற்போது இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் உலகச் சந்தையில் பதற்றம் தணிந்து எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் முழுப் பலனையும் மக்களுக்கு நேரடியாகக் கடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
