வெனிசுவேலாவின் வடக்குக் கரையோரப் பகுதியில் ஏற்பட்ட இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த 1,520 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 157 பேர் காணாமல் போயுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இதுவரை 138 பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தத்தில் 250 கட்டிடங்கள், 20 வணிக வளாகங்கள் உட்பட மொத்தம் 346 உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 8 வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியை உருவாக்க வெனிசுவேலா அரசு தீர்மானித்துள்ளது. மேலும், நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் தேசிய அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
