மாத்தறை மாவட்டம் கந்தரா காவல் பிரிவிற்குட்பட்ட தலல்லா பகுதியில், இரு பேருந்துகள் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
போலீசார் தெரிவித்ததின்படி, இன்று காலை இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பெத்தீகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
