தியதலாவவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று, பண்டாரவெல–வெலிமட பிரதான சாலையின் யல்பத்வெல பகுதியில் நேற்று (27) மாலை விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்து முதலில் ஒரு வாடகைக் கார் மீது மோதியதுடன், பின்னர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சரக்குந்துகள் மற்றும் ஒரு மின் கம்பம் மீதும் மோதி நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
