புசல்லாவையில் நடைபெற்ற ‘மெல்போட் பிரீமியர் லீக் – சீசன் 03’ ( Melfort Premier League – Season 03) கிரிக்கெட் தொடர் நேற்று (27) கோலாகலமாக ஆரம்பமானது.
இன்று (28) போட்டியின் பரபரப்பான அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்களுக்கான பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
மெல்போட் நண்பர்கள் ஒன்றியத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினரான மறைந்த அமரர் பேரின்பராஜின் நினைவைப் போற்றும் வகையில், இம்முறை போட்டித் தொடர் “பேரின்பராஜ் ஞாபகார்த்த கிண்ணம்” (Perinbaraj Memorial Trophy) என்ற பெயரில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
