பூமியின் ஆழ்கடலுக்கு அடியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 73 புதிய எரிமலை பள்ளத்தாக்குகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆழ்கடல் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், எரிமலை வெடிப்புகளுக்குப் பின்னர் உருவாகும் ‘கால்டெராஸ்’ எனப்படும் புதிய எரிமலை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை கடலுக்கு அடியில் 30 எரிமலை அமைப்புகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கண்டறியப்பட்ட எரிமலைகளில் 61, டெக்டானிக் தட்டுகளின் மையப்பகுதிகளில் அமைந்துள்ளதுடன், சில கடலடி மலைத்தொடர்கள் மற்றும் எரிமலை வளைவுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இவை தற்போது அமைதியாக இருந்தாலும், எதிர்காலத்தில் மீண்டும் வெடிக்கும் பட்சத்தில் ஆழிப்பேரலை உள்ளிட்ட பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், கண்டறியப்பட்டவற்றில் 7 எரிமலை பள்ளங்கள் அதிக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவை தொடர்பான மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
