புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த ரூ.33 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மதுபானத் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5,574 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மதுவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
